வாலிபருக்கு அரிவாள் வெட்டு. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.

7809பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடியில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொல்ல முயன்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்த சுதந்திர மூர்த்தி மகன் வெங்கடேஷ் (வயது 21) கூலி வேலை செய்து வருகின்றார். இவர் இன்று காலை பூவாளூர் பகுதியில் உள்ள மார்க்கெட் அருகே வந்து கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் மற்றும் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த வெங்கடேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் வெங்கடேசுக்கும் முகேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 19ஆம் தேதி ஏரியில் மீன் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக வெங்கடேஷை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக மனோஜ் முகேஷ் பிரேம் தமிழ்மாறன் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி