செவ்வாயின் நில அமைப்பு கடினமான பாறைகள் காரணமாக கரடுமுரடாக உள்ளது. இதனால் பூமியில் நாம் பயன்படுத்தும் சாதாரண டயர்கள் பொருத்திய வாகனங்களை அங்கு இயக்க முடியாது. எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகள் அதிகமாகும் போது அங்கு தரையிறங்கி ஆய்வு நடத்த வாகனங்கள் தேவைப்படும். அதற்காக நாசா விஞ்ஞானிகள் உலோக மெஷ் அதாவது கம்பி வலைகளால் ஆன டயர்களை உருவாக்கியுள்ளனர். இவை இரும்பால் ஆனவை அல்ல. நிக்கல் - டைட்டானியம் உலோக கலவையால் ஆனவை.