தேர்தலை புறக்கணித்து பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு!

568பார்த்தது
பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததால் கமலாபுரம் துரைராஜ் நகர் பகுதி மக்கள் பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் ஊராட்சி உட்பட்ட துரைராஜ் நகர் பகுதி மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அப்பகுதிக்கு சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அரசிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் சார்பாக நாராயணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி