பராமரிப்பு பணி: தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து

71பார்த்தது
பராமரிப்பு பணி: தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  


மதுரை கோட்டப்பகுதியில் ஏப்ரல் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6. 25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - நெல்லை ரயில் (06667) மற்றும் நெல்லையில் இருந்து காலை 7. 35 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை - தூத்துக்குடி ரயில் (06668) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  


வருகிற 22-ஆம் தேதி நெல்லை- பாலக்காடு - நெல்லை ரயில்கள் (16791/16792) கொல்லம் - நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வருகிற 7-ஆம் தேதி, 14-ஆம் தேதி ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11. 35 மணிக்கு புறப்பட வேண்டிய ஓஹா விரைவு ரயில் வருகிற 8, 15-ஆம் தேதி அதிகாலை 1. 30 மணிக்கு 115 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி