பீரோவில் வைத்திருந்த நகை திருட்டு - போலீஸ் விசாரணை!!

55பார்த்தது
பீரோவில் வைத்திருந்த நகை திருட்டு - போலீஸ் விசாரணை!!
நாசரேத்தில் பீரோவில் வைத்திருந்த ரூ. 6லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாச புரத்தைச் சேர்ந்தவர் மோகன் மனைவி ஷைலா (44). இவர்களது வீட்டில் கடந்த 29ம் தேதி ஷைலாவின் அண்ணன் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. விழா முடிந்த பின்னர் பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14. 5 பவுன் நகைகள் திருடு போய்விட்டதாம். இதன் மதிப்பு ரூ. 6லட்சம் ஆகும். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி