பரமேறுதலின் ஆலய 125-வது ஆண்டு விழா: மே 4ஆம் தேதி துவக்கம்!

73பார்த்தது
பரமேறுதலின் ஆலய 125-வது ஆண்டு விழா: மே 4ஆம் தேதி துவக்கம்!
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகில் உள்ள பிள்ளையன்மனை சேகரம் பிள்ளையன்மனை தூய பரமேறு தலின் ஆலய 125 வது ஆண்டு விழா 9 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான மே 4 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆலயவளாகத்தில் வி. பி. எஸ். கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 5ஆம் தேதி ஞாயிறுகிழமைமுதல் 7ஆம்தேதிசெவ்வாய்கிழமை வரை 3 நாட்கள் இரவு 7 மணிக்கு உயிர்மீட்சிக்கூட்டங்கள் நடக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த சகோ. ஆல்பர்ட் சாலமோன், சகோ தரி. பிந்து ஆல்பர்ட் ஆகியோர் தேவ செய்தி கொடுக்கின்றனர்.

ஐந்தாவது நாளான மே 8 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி க்கு பரி. ஞானஸ்நான ஆராதனை யும், மாலை 4 மணிக்கு புதுப்பிக்கப் பட்ட ஆலயத்தின் பிரதிஷ்டையும், அதனைத்தொடர்ந்து 125 வது ஆண் டு ஆலய பண்டிகை ஆராதனையும் நடைபெறுகிறது. இதில் திருமண் டல நிர்வாகஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
ஆறாவது நாளான மே 9 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 3. 30 மணிக்கு ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது. இதில் சபைமன்றத் தலைவரும், சேகரத் தலைவருமான வெல்ற்றன் ஜோசப் தேவசெய்திகொடுக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி