மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

84பார்த்தது
மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா. மூர்த்தி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று(செப்.16) மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, தனிவிரல் ரேகை பிரிவு, மாவட்டத்தில் இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, புகைப்பட பிரிவு, மாவட்ட காவல்துறை துப்பறியும் நாய்ப்படை பிரிவு ஆகியவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

மேலும், காவல்துறை பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். துப்பறியும் நாய்ப்படை பிரிவில் உள்ள நாய்களின் ஆரோக்கியம் மற்றும் அதன் பராமரிப்பு குறித்து கேட்டறிந்து நாய்ப்படை பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி