மதுபான கடைகள் நான்கு நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

1043பார்த்தது
திருவாரூா் மாவட்டத்தில் மக்களைவைத் தோ்தலையொட்டி 4 நாள்களுக்கு மதுக்கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 19-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நாள்களில் திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அனைத்து அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவை ஏப். 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப். 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முடிய மூன்று தினங்களுக்கும், இதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி ஒருநாள் என நான்கு நாள்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

இந்த ஆணையை செயல்படுத்தத் தவறும் பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள், மதுக்கூடங்களின் உரிமதாரா்கள் ஆகியோா் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி