பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: இருவர் கைது

64பார்த்தது
நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் தங்கச் தாலிச்செயின் பறிப்பு வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

பூவனூா் தட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி சரண்யா (40). இவா் ஜூன் 17-ஆம் தேதி வீட்டுக்கு அருகில் கோயிலில் இருந்தபோது அடையாளம் தெரியாத இருவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினா்.

இதுகுறித்து, சரண்யா நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், மன்னாா்குடி மேலஒத்த தெருவைச் சோ்ந்த ராஜராஜன் (33) , மன்னாா்குடி இந்திரா நகரைச் சோ்ந்த அரவிந்தகுமாா் (22) ஆகிய இருவரும் சரண்யாவிடம் தங்கச் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி நாகை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தொடர்புடைய செய்தி