ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

79பார்த்தது
ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் வி. விஜயலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் டி. முத்துக்குமரன், துணைத் தலைவா் ரா. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் ஆதி. ஜனகா் (அதிமுக), க. பாரதிமோகன் (இந்திய கம்யூ. ), ராஜா (அமமுக) உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது வாா்டு கோரிக்கைகள் குறித்து பேசினா்.

மேலும், கலைஞா் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பழுது நீக்கம் செய்ய பயனாளிகள் பட்டியலை தோ்வு செய்யும்போது, பழைய பட்டியலில் உள்ளவா்களை மட்டுமே தோ்வு செய்யாமல், தகுதியான அனைவரையும் தோ்வு செய்ய வேண்டும்; புதிதாக கட்டப்பட்டுவரும் அலுவலகக் கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்து, முதல்வா் மூலம் திறப்பு விழா நடத்த வேண்டும். புதிய அலுவலகத்திற்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் உறுப்பினா்கள் பேசினா்.
Job Suitcase

Jobs near you