பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத் தொடக்க விழா

599பார்த்தது
நலிவடைந்த நிலையில் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பாஜகவின் திருவாரூர் மாவட்ட தலைவர் ச. பாஸ்கர் தலைமை வகித்தார். மத்திய அரசு சார்பில் மண்பாண்டம் தயாரிப்பு மரவேலை செய்வோர் அரிவாள் பூட்டு போன்ற இரும்பு ஆயுதங்கள் தயாரிப்போர், தையல் கலைஞர்கள், பூ மாலை தொடுப்போர் உள்ளிட்ட ஏழை எளிய கைவினைக் கலைஞர்கள் பயன்படுத்துவதற்காக வட்டி இல்லா கடனாக ஒரு லட்ச ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட தகுதி உடைய நபர்களுக்கு ஆன்லைன் மூலம் உடனடியாக விண்ணப்பித்தனர். மாவட்ட துணை தலைவர் j. ஜெயக்குமார் மன்னார்குடி மேற்கு ஒன்றிய தலைவர் KN. செல்வம் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாவட்டத் தலைவர் நெடுவை ராம ராஜேஷ் வரவேற்றார். மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் பாஞ்சான் சேகர், கிளைத் தலைவர் நாகராஜன் இளைஞரணி மாவட்ட தலைவர் ஆர் யு ராம் மாவட்ட துணைத்தலைவர் வீரகுரு உள்ளிட்ட ஏராளமானூர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் நிறைவாக தமிழரசன் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி