திருநங்கை ஆசீர்வாதத்துடன் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்

2988பார்த்தது
திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் அருகே திருநங்கை ஆசீர்வாதத்துடன் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுகவினர்.

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ தனது முதல் நாள் பிரச்சாரத்தை வண்ணாரப்பேட்டையில் நேற்று தொடங்கினார். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் பிரச்சாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பிரச்சாரத்தை துவக்கினர்.

அப்போது திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருநங்கைகள் மூன்று பேர் வேட்பாளருக்கு எலுமிச்சை பழம் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி