ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டி போராட்டம்

74பார்த்தது
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்த கொலை வழக்கை சிபிஐ -க்கு மாற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் தலையில் 500-க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி