திறந்தநிலையில் உள்ள கால்வாயால் வாகன ஓட்டிகள் அச்சம்

1565பார்த்தது
திறந்தநிலையில் உள்ள கால்வாயால் வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர் தேரடியில் இருந்து காக்களூர் ஏரிக்கரை கால்வாய் வழியாக, ஆவடி, திருவள்ளூர் பைபாஸ் சாலைக்கு தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றன.

தேரடி, வீரராகவர் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் வரும் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு அவை, காக்களூர் ஏரிக்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு தியேட்டர் அருகில், திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூடப்படாததால், அந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. கனரக வாகனங்கள் வரும் போது, எதிரில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது.

எனவே, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் திறந்து கிடக்கும் கால்வாயினை மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி