100% வாக்களிக்க வலியுறுத்தி படகில் சென்று விழிப்புணர்வு

51பார்த்தது
ஆவடி மாநகராட்சியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்


ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஆவடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக மாநகராட்சி பெண் ஊழியர்கள் ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து ராட்சத கோலத்தை போட்டு அதில் என் வாக்கு என் உரிமை என எழுதி வரவேற்றனர். பின்னர் பூங்காவில் அமைக்கப்பட்ட செல்பி பாயிண்டில் பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து பசுமை பூங்காவில் உள்ள ஏரியில் படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி