பொன்னேரி அருகே இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொலை

4234பார்த்தது
பொன்னேரி அருகே இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொலை
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் சாலையில் அடையாளம் தெரியாத நபரை வேறு எங்கோகொலை செய்து இரண்டு கைகளையும் தனியாக வெட்டி எடுத்து முகத்தை கொடூரமாக சிதைத்து முதுகு பகுதியில் வெட்டி அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்பில் சுருட்டி கட்டி வீசி கொலையாளிகள் சென்றனர்.

அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி உறுப்புகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அருகாமையில் கை ஒன்று கிடைத்துள்ளது. பின்னர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போது இறந்து கிடந்தவர் மீஞ்சூர் அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அசின் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.
பின்னர் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அசின் ஏற்கனவே பல கொலை மற்றும் பிற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என கூறப்படும் நிலையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி