திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே நில புரோக்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சாமிதுரை (வயது 21), ஹரிஹரன் (வயது 21) ஆகிய இருவரை நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில் அதிரடியாக போலீசார் விசாரணை நடத்தி நேற்று கைது செய்தனர். மேலும் எந்த காரணத்திற்காக வீட்டின் முன்பு வெடிகுண்டு வீசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.