ரயிலில் ஆபத்துடன் சீட் பிடிக்கும் பயணிகள்

2252பார்த்தது
நெல்லை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சென்னை உள்பட வெளியூர்களுக்கு செல்லும் ரயிலில் சீட்டு பிடிப்பதற்காக, ரயில் கண்முன் தூரத்தில் வரும்போது நடை மேடையில் இருந்து குதித்து தண்டவாளத்தை ரயில் என்ஜினின் முன்புறமாக கிராஸ் செய்து ஆபத்தான முறையில் நின்று சீட்டு பிடிக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. இது மிகவும் ஆபத்து என்பதால் போலீசார் அறிவுரை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.