திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் திருவிழா இன்று (ஏப். 22) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித சூசையப்பர் திருத்தல நிர்வாகிகள் செய்திருந்தனர்.