திருநேல்வேலி மாவட்டம் கான்சாபுரம் மேலத்தோணித்துறையை சேர்ந்த ஜெசிபிந்து கணவர் துரைராஜ் நாடார். இவர் கடந்த 26. 11. 2023 அன்று பனை ஏறும்போது பனையில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இறந்த இந்த பனை தொழிலாளி குடும்பத்திற்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் ரூ. 50ஆயிரம் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க காரியக்கமிட்டி மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்துகொண்டனர்.