நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பாளையங்கோட்டை ராதாபுரம் கொடுமுடியார் அணை போன்ற பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நெல்லையில் அதிகபட்சம் கொடுமுடியாறு அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும் ராதாபுரத்தில் 35 மில்லி மீட்டர் மழையும் பாளையங்கோட்டையில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.