நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் இன்று (பிப்ரவரி 23) இலவச சிறப்பு கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.