நெல்லையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

64பார்த்தது
3 குற்றவியல் சட்ட திருத்தங்கள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஜூலை 1) நெல்லை வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் பொழுது மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you