நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் 98-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் புஷ்பராஜ் பட்டமளிப்பு விழா பிரகடன உரையை வாசித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1437 மாணவ மாணவியர்களுக்கு ஆணையர் மூர்த்தி பட்டம் வழங்கி வாழ்த்தினார்.