நாய் கடித்து 2 வயது ஆண் குழந்தை படுகாயம்: வழக்குப்பதிவு

85பார்த்தது
நாய் கடித்து 2 வயது ஆண் குழந்தை படுகாயம்: வழக்குப்பதிவு
கழுகுமலை அருகே நாய் கடித்து படுகாயம் அடைந்த 2 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளம் சிஆர் காலனியைச் சேர்ந்தவர் சரத்குமார் மனைவி சத்யா (33). இந்த தம்பதிக்கு சக்திபாலன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தை அவர்களது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சவுந்திரராஜன் மனைவி மகேஸ்வரி (37) என்பவர் வளர்த்து வரும் நாய், சக்திபாலனை கடித்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் கழுகுமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன், மகேஸ்வரி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி