நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடனா நதி மலை பகுதியில் அமைந்துள்ள கோரக் நாதர் கோவில். இந்த கோவிலில் கோரக் நாதர் மற்றும் அனுசுயா பரமேஸ்வரி ஆகியோர் அருள் பாவிக்கின்றனர். நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்.