அம்பை அருகே இருதரப்பு மோதல் - 15 பேர் மீது வழக்கு

3463பார்த்தது
அம்பை அருகே இருதரப்பு மோதல் - 15 பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேல ஏர்மாள் புரம் பகுதியில் நேற்று நள்ளிரவு இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இரு தரப்பிலும் பாதிக்க பட்டவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இந்த அடிதடி தொடர்பாக போலீசார் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.