திருநெல்வேலி மாவட்டம் விகே புரம் மதுரா கோட்ஸ் தொழிற்சாலை காலனியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக பாபநாச வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாபநாசம் வனச்சகர் சத்தியவேல் அவர்களின் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டெடுத்து கோவித்தேரி பீட் வனப் பகுதிக்குள் நல்ல முறையில் விட்டு வந்தனர்.