பீகாரில் ஆள் கடத்தல், கொலை, கும்பல் வன்முறை, சிறை உடைப்பு என பல்வேறு வழக்குகளில் சிக்கி 17 ஆண்டுகள் சிறையில் இருந்த கிரிமினல் குற்றவாளி அசோக் மஹ்தோவின் மனைவிக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. கிரிமினல் வழக்கால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற காரணத்தால் மஹ்தோ அவசர அவசரமாக 46 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியை வேட்பாளராக்கும் முயற்சியை எடுத்து இருப்பது பிஹார் அரசியலில் கவனம் பெற்றுள்ளது.