விஜய் கட்சியினர் மீது பாய்ந்த முதல் வழக்கு

572பார்த்தது
விஜய் கட்சியினர் மீது பாய்ந்த முதல் வழக்கு
நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்நிலையில் கட்சியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 - ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம், நெடுமானூர் மட்டிகை ஆகிய ஊர்களில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதற்கு போலீசாரின் அனுமதி வாங்கவில்லை எனக்கூறி 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்சி கொடியும் அகற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி