கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த சிறுவன் பலி

60பார்த்தது
கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த சிறுவன் பலி
சென்னை சைதாப்பேட்டையில் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார். குடிநீரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வருவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் தங்கையான 7 வயது சிறுமிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அருகில் உள்ள கடையில் காலாவதியான உணவை சாப்பிட்டாரா? என்ற கோணத்திலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி