பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்து மாணிக்கம். இவர் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னை துரைப்பாக்கத்தில் பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சொந்த கட்சியினரே முத்து மாணிக்கத்தை கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அதன் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.