தேப்பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் விழா

62பார்த்தது
கோடை காலம் முடியும் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அதிமுக சார்பில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் கேபிள் குமரன் ஏற்பாட்டில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாரதிமோகன் தலைமையில், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.