வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

60பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற  தேர்தல் வாக்குப்பதிவிற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ. பி. மகாபாரதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன்,
பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் பொறியாளர் தினேஷ் பாண்டியன்,
வட்ட வழங்க அலுவலர் அருணகிரி, தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மற்றும் மண்டல அனைத்து மண்டல அலுவலர்கள் உதவி மண்டல அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி