தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 14. 54 கோடிக்கு தீர்வு

68பார்த்தது
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 14. 54 கோடிக்கு தீர்வு
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  
இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே. பூரண ஜெயஆனந்த் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் டி. சோழவேந்தன், வழக்குரைஞர் ஆர். திராவிடசெல்வன் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நலம்,
சிறப்பு மாவட்ட நீதிபதி எம். வடிவேலு, இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். ராஜேஸ் கண்ணன், வழக்குரைஞர் கே. சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட 2வது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கும்,
கூடுதல் சார்பு நீதிபதி எம். முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பாரதி, வழக்குரைஞர் என். மகாலட்சுமி ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 930 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 6 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 14 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 416 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

தொடர்புடைய செய்தி