போஸ்டரை கிழித்த முதல் நிலை மண்டல மேலாளர்: தஞ்சையில் பரபரப்பு

580பார்த்தது
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடைய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முதுநிலை மண்டல மேலாளர் விளம்பர பேனரை கிழித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளராக ஸ்ரீமோகனா (59) பணியாற்றி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடைய பணியாளர்கள் சிலரை பணியிடை நீக்கம் செய்தும், பல பணியாளர்களை பணி இடமாற்றம் செய்துள்ளார்.

இதனை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நேற்று தஞ்சாவூரில் உள்ள முதுநிலை மண்டல அலுவலகம் முன்பாக மண்டல மேலாளரின் பழிவாங்கும் போக்கை கண்டித்து விளம்பரத் தட்டியை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் ஒன்று கூடினர்.

அப்போது அங்கு வந்த முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீமோகனா, யாரைக் கேட்டு இங்கு விளம்பரத் தட்டியை வைத்தீர்கள், நீங்கள் பணம் சம்பாதிக்க இதுபோல நடந்து கொள்கிறீர்கள் என அங்கிருந்த பணியாளர்களிடம் கோபமாக கேட்டார். அப்போது அவரை செல்போனில் வீடியோ எடுத்த பணியாளர்களை விரட்டி அவரை வீடியோ எடுக்க கூடாது என மிரட்டினார். மேலும் செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது அவர்களையும் எடுக்க கூடாது என்றார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி