பாட்டாளி மக்கள் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

84பார்த்தது
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம. க. ஸ்டாலின். இக்கூட்டத்தில் உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி,
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்,
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற செய்வது என்றும், மேலும் அந்தக் கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியை பாமக பெற்று பாமக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்றும், டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தபோது எதிர்பாராத மழையால் குறைந்த அளவு மகசூல் கிடைக்கப்பெற்றது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் நஷ்டயிடு வழங்க வேண்டும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் கொள்ளிடம் ஆற்றில் மேலராமநல்லூர் மேட்டு தெரு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் தஞ்சாவூர் விக்கிரவாண்டி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பாபநாசம் தாலுகாவில் உள்ள அம்மாபேட்டையை தனி தாலுகாவை அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி