எள் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து வேளாண் துறை விளக்கம்

58பார்த்தது
எள் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து வேளாண் துறை விளக்கம்
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மைத் துறை கூறியிருப்பதாவது: குறைந்த வயதில் 85 நாட்களில் அதிக நீர் தேவை இன்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர் எள் ஆகும். இதற்கு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. எள் பயிர் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரும். இதில் வெள்ளை, கருப்பு, சிவப்பு போன்ற ரகங்கள் உள்ளது. சித்திரை மாதத்தில் வி. ஆர். ஐ. 2, 3, டி. எம். பி. 7, 6 கோ 1போன்ற ரகங்கள் உகந்ததாகும். 2 முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு கலைத்து விட வேண்டும் நோய்களை கட்டுப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லி மருந்தை 1
கிலோ விதைக்கு 4 கிராம் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். சலித்த சுத்தமான மணலை விதையின் அளவுக்கு சம அளவு கலந்து சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். பிறகு குச்சியை வைத்து இழுத்து செல்லும்போது விதைகள் மண்ணில் அழுந்த புதைந்து விடும். பின்னர் 15ம் நாள் 15 சென்டிமீட்டர் இடைவெளியை வைத்து செடியை கலைத்து விட வேண்டும். விதைத்த 30ம் நாள் 30 சென்டிமீட்டர் இடைவெளி வைத்து மீண்டும் ஒருமுறை செடியை கலைத்து விட வேண்டும். இதனால் அதிக கிளைகள் வெடித்து அதிக காய்கள் பிடிக்கும். விதை விதைத் ததுடன் ஒரு முறையும், 7ம் நாள் ஒரு முறையும், பூக்கும் தருணம் ஒரு முறையும், காய் பருவத்தில் ஓர் இரவு முறையும் நீர் பாசனம் செய்ய வேண்டும்" என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி