ராஜகிரி ஊராட்சி காமராஜர் தெருவாசிகள் தேர்தல் புறக்கணிப்பு

4002பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராஜகிரி ஊராட்சிக்கு உட்பட்ட  காமராஜர் தெருவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் வசித்து வருகிறார்கள். இம்மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்க செல்லாமல் உள்ளனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறியதாவது,

பட்டியல் இனத்தைச் சார்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் 60 வீட்டில், 250 குடும்பங்கள் பல ஆண்டுகளாக இட நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம். இது சம்பந்தமாக வீட்டுமனை கேட்டு பலமுறை வட்டாட்சியர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எங்களுக்கு குடிநீர் மற்றும் சாலை வசதி, அனைவருக்கும் வீடு திட்டம், போன்ற எந்த விதமான அடிப்படை வசதிகளை கூட எங்களுக்கு செய்து தரவில்லை, ஆகவே இந்த தேர்தலை  புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி