மணலூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

534பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரம் அருகே மணலூர் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பிரம்மோத்சவ விழா கடந்த 8-ம் தேதி அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  
தொடர்ந்து விழா நாட்களில்  தினந்தோறும் இரவு அம்பாள் அன்ன, ரிஷப, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.  
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் எழுந்தருள திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.