ராஜகிரியில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்

73பார்த்தது
ராஜகிரியில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்
அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி அதிமுக சார்பில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் துரை. சண்முகபிரபு ஏற்பாட்டில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரத்தினசாமி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு இளநீர், தர்ப்பூசணி, மோர், பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ராம்குமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி