புளியங்குடியில் கிணற்றில் மிதந்த உடல் காவல்துறையினர் மீட்பு

1533பார்த்தது
புளியங்குடியில் கிணற்றில் மிதந்த உடல் காவல்துறையினர் மீட்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி கற்பக வீதியைச் சேர்ந்த அழகு முருகன் (41) என்பவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புளியங்குடி காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று ஒரு கிணற்றில் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை, தமுமுக மருத்துவ சேவை அணியினரும் விரைந்து சென்று கிணற்றில் கிடந்த உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி