மேலப்பட்டமுடையாா்புரத்தில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது

80பார்த்தது
மேலப்பட்டமுடையாா்புரத்தில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையாா்புரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மின்னொளி கபடிபோட்டி நடைபெற்றது. 7 கிங்ஸ், பி. எம். சி. கபடி குழு சாா்பில் 16ஆவது ஆண்டு ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மைலப்புரம் அணி முதல் பரிசும், பட்டமுடையாா்புரம் அணி 2ஆவது பரிசும், கீழப்பாவூா் அணி 3ஆவது பரிசும், திப்பணம்பட்டி அணி 4ஆவது பரிசும், மாங்குடி அணி 5ஆவது பரிசும், முருகன்குறிச்சி அணி 6ஆவது பரிசும், ஐந்தாங்கட்டளை அணி 7ஆவது பரிசும் பெற்றன. வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவுக்கு, திமுக பிரதிநிதி தங்கபாண்டி தலைமை வகித்தாா். குணசேகரன், ஜெகநாதன், முருகராஜ் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், மாநில சுற்றுச்சூழல் அணித் தலைவா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், மகேஷ்மாயவன், மாவட்ட பிரதிநிதி சீ. பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜெ. கே. ரமேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சங்கீதாசுதாகா், கனகராஜ்முத்துபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கீழப்பாவூா் பேரூராட்சி உறுப்பினா் தேவஅன்பு நன்றி கூறினாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி