கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில், 20 வயதே நிரம்பிய கால்நடை மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்தன் என்ற அந்த மாணவர் தனது வகுப்பு மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்களால் பிப்ரவரி 16ம் தேதி, காலை 9 மணி முதல் பிப்ரவரி 17ம் தேதி மதியம் 2 மணி வரை 29 மணி நேரம் கைகளால் அடிவாங்கியும் பெல்ட்டால் அடிவாங்கியும் ராகிங்க்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து பிப் 18 ஆம் தேதி குளியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.