அந்த கிராமத்தில் பாம்புகள் செல்லப் பிராணிகள்

567பார்த்தது
அந்த கிராமத்தில் பாம்புகள் செல்லப் பிராணிகள்
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஷெட்பால் கிராமம். இங்கு வசிக்கும் கிராம மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 2,600 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருப்பினும், பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்காமல் ஒன்றாக அவர்களது இருப்பிடங்களிலேயே வசிக்கின்றன. கிராம மக்கள் பாம்புகளை குடும்ப உறுப்பினர்களாக கருதுகின்றனர். குழந்தைகளும் பாம்புகளுடன் விளையாடுவது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

தொடர்புடைய செய்தி