விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்

61பார்த்தது
விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்
மும்பை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 6 இந்தியர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பேனா ரீஃபில் மற்றும் கண் கண்ணாடி பெட்டிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கைதானவர்களில் மூன்று பேர் ஷார்ஜாவிலிருந்தும், இருவர் துபாயிலிருந்தும், ஒருவர் ஜித்தாவிலிருந்தும் வந்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி