வாளை காட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது

558பார்த்தது
வாளை காட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேதல்லாகுளம் முனியாண்டி கோவில் பகுதியில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி வயது என்பவர் (32) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது கீழமேல் குடி பகுதியைச் சேர்ந்த ராகேஷ் வயது 19 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் தட்சிணாமூர்த்தியை வாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் பறித்து சென்றதாக தட்சிணாமூர்த்தி மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி