அரசுபேருந்து மோதல்: அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்

3270பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் சிவகங்கையிலிருந்து தேவகோட்டைக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது காரைக்குடியில் இருந்து கோவிலூர் கெமிக்கலில் வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் தனது வீடு உள்ள நெசவாளர் காலணிக்கு இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்து கொண்டிருந்தார்.

அவர் வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் கீழே விழுந்தது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஆறுமுகம் மீது அரசு பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை கைப்பற்றிய குன்றக்குடி காவல் துறையினர் உடல் கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்தான அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி