சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பன் (58). இவர் வைகை ஆற்றில் குறைவான தண்ணீர் செல்லும் நேரங்களில் குடும்பத்தோடு சேர்ந்து மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுகிறார். தற்போது, விவசாயி கருப்பன் அன்னியனேந்தல் பகுதியில் வைகை ஆற்றின் அருகே குடிசை அமைத்து குடும்பத்தோடு இரவு பகலாக மீன்பிடித்து வருகிறார். ஆற்றிலிருந்து கட்டிக்குளம் கால்வாய்பிரியும் இடத்தில் பத்தக்கட்டை அமைத்தும், வலை வீசியும் மீன்களை பிடிக்கின்றனர்.