'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி ராகுல் பிரதமராக வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணியுடன் பாஜக ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையே டெல்லியில் ‘இண்டியா’ கூட்டணியின் கூட்டம் கூடுகிறது. இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ராகுல் பிரதமராக வருவதற்கு ஆதரவளிப்பதாகவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்ய இருப்பதாகவும் கூறினார்.